Skip to main content

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

cbse

 

'உருமாறிய கரோனா' பரவல் காரணமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், தற்பொழுது மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு தேதியை அறிவித்துள்ளார்.

 

தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த வருடம் மே 4-ஆம்  தேதி சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. மே 4-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10 ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறும். செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும். ஏற்கனவே சொன்னதுபோல், 30 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடைபெறும். ஜூலை 15-ஆம் தேதிக்குள்  தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்