ADVERTISEMENT

தலைகுப்புற ஆற்றில் விழுந்த பேருந்து... 9 பேர் உயிரிழந்த துயரம்!

01:28 PM Dec 15, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஏழூர் என்ற இடத்தில் ஆற்றுப்பாலத்தைக் கடக்கும்போது அரசு பேருந்து கவிழ்ந்து தலைகுப்புற ஆற்றில் விழுந்ததில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அந்தப் பேருந்தில் 26 பேர் பயணித்த நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக தேசிய மீட்பு படைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT