ROJA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த அகரம்பேட்டை எனும் இடத்தில் சுமதி என்ற பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பொழுது திடீரென லாரி மோதி உயிரிழந்தார்.

Advertisment

அப்போது அந்தவழியே வந்த நகரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும் பிரபல நடிகையுமான ரோஜா அந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அந்த இடத்தில் காரை நிறுத்தி அருகிலிருந்தோரைவிசாரித்தார். அப்பொழுது இறந்த பெண்னின் சடலத்தை உடனடியாக அகற்றிய போலீசார் விபத்துக்குள்ளாகிய லாரி ஓனரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செல்லப்பட்டதாக தெரியவந்தது.

உடனே அங்கிருந்த விபத்துக்குள்ளானவரின் உறவினர்களுடன் ரோட்டில் அமர்ந்து அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம்பதற்றம் நிலவியது.

Advertisment