ADVERTISEMENT

வெறும் 49 ரூபாய்க்கு சேவைகளை அள்ளித்தரும் பி.எஸ்.என்.எல்... புது அறிவிப்பு!!!

03:52 PM Sep 10, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. பல புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருகை மற்றும் அவர்களது விலை குறைவான அதிரடி சலுகை அறிவிப்புகள், பயனாளர்களை அவர்கள் பக்கம் இழுத்து வருகிறது. இதனால் புதிய பயனாளர்களைத் தன் பக்கம் கவர்வதும், ஏற்கனவே உள்ள பயனாளர்களைத் தக்க வைப்பதும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது. இதனால் அந்நிறுவனமும் தற்போது இதுபோன்ற விலை குறைவான அதிரடி அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் 49ரூபாய் விலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 2ஜிபி டேட்டாவும், 100 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ்கால் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 100 நிமிடங்களைத் தாண்டும் போது நிமிடத்திற்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தினந்தோறும் 100 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கால அளவு 28 நாட்கள் ஆகும்.

இச்சலுகை அறிவிப்பானது நவம்பர் 29- ஆம் தேதி வரை பொருந்தும். ஆன்லைன் ரீசார்ஜ் மற்றும் வெளிக்கடைகள் மூலம் இந்த ப்ளானை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் அல்லது இந்த ப்ளானை STV COMBO49 என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT