ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து பிரதமர் மோடியும் உயர்மட்ட தலைவர்களும் தான் முடிவெடுப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார். மதுரையில் செய்துயாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என ராமதாஸ் அத்வாலே கூறியது அவருடைய சொந்த கருத்து. பாஜக கூட்டணி குறித்து பிரதமர் மோடி தான் முடிவெடுக்க வேண்டும். மேலும் மோடியின் தமிழக வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என முரளிதர ராவ் கூறினார்.
Show comments