ADVERTISEMENT

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற இராணுவ தளபதி நரவனே!

09:37 AM Dec 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் அடுத்த முப்படை தலைமை தளபதியை நியமிக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

முப்படை தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும் வரை, முப்படை தளபதிகளில் மூத்தவரே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்பட்டுவந்தார். அப்பதவி உருவாக்கப்பட்ட பின்னர், முப்படை தலைமை தளபதியே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

இந்நிலையில், முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தின் திடீர் மரணத்தையடுத்து, தற்போதைய முப்படை தளபதிகளில் மூத்தவரான இராணுவ தளபதி நரவனே அப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய முப்படை தலைமை தளபதி நியமிக்கப்படும்வரை, நரவனே முப்படை தளபதிகள் குழு தலைவராக செயல்படவுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT