ADVERTISEMENT
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
ADVERTISEMENT
இதனால் உலகம் முழுவதும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை சில வாரங்களாக இயங்காமல் இருந்து வருகின்றன. கரோனாவின் கோரம் அதிகம் இருக்கின்ற அமெரிக்காவில் பல லட்சக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலை இழந்து வீடுகளில் இருக்கிறார்கள். இந்நிலையில் சிகாகோ நகரில் டிரக் ஓட்டுநர் ஒருவர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் அலுவலகத்துக்கு வந்து முதலாளியின் காரை, தான் எப்போதும் ஓட்டும் டிரக்கால் மோதி இடித்துத் தள்ளியுள்ளார். இதில் முதலாளியின் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT