ADVERTISEMENT

அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழப்பு; டீன் வெளியிட்ட பகீர் தகவல்!

09:38 PM Oct 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் என்ற இடத்தில் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு என பல்வேறு மருத்துவத்துறைகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மருத்துவமனையின் டீன் பகிர் தகவலை தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT