ADVERTISEMENT

கன்னியாஸ்திரிக்கு 13 முறை பாலியல் தொல்லை !!; கேரள பேராயரை காட்டிகொடுத்த வருகை பதிவேடு !!

03:41 PM Jul 03, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை 13 முறை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான குற்றசாட்டில் கிறிஸ்துவ பேராயரை விசாரிக்க போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

கேரளாவில் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிரான்கோ முலக்கள் தன்னை இரண்டு ஆண்டுகளில் 13 முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் எனவும் அதை பேராலய நிர்வாகத்திடம் சொல்லியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஒரு கன்னியாஸ்திரி பெண்மணி பரபரப்பு புகார் ஒன்றை போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், பேராயர் பிரான்கோ முலக்கள் கோட்டயத்திலுள்ள குருவிலாங்கூடு விருந்தினர் மாளிகையில் வைத்து தன்னை அத்துமீறி 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த விருந்தினர் மாளிகைக்கு சென்ற போலீசார் சம்பந்தப்பட்ட பேராயர் வந்து சென்றதற்கான வருகை பதிவேட்டை சோதித்தனர். அதில் புகார் தெரிவித்த கன்னியாஸ்திரி குறிப்பிட்ட நாட்களும் பேராயர் வந்து சென்ற நாட்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் பேராயர் அங்கு வந்து சென்றதை போலீசார் உறுதி செய்தனர்.

மேலும் இது தொடர்பாக மற்ற நான்கு கன்னியாஸ்த்திரிகளிடமும் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராயருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT