Skip to main content

200 ஆபாச வீடியோக்களுடன் சிக்கிய முகநூல் கொள்ளை கும்பல்!-கோவையில் திக் திக்!!

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

பேஸ்புக் மூலம் காதல் வலைவிரித்து  சுமார் 60 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை ஆபாச படமெடுத்து பணம், நகை பறித்த மோசடி கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

fb

 

கோவை பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு பேஸ்புக் எனப்படும் முகநூலில் இருந்து திருநாவுக்கரசு என்ற இளைஞர் பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அவரின் முகநூல் நட்பை அந்த கல்லூரி மாணவியும் ஏற்றுக்கொள்ள, தொடர்ந்து பேச ஆரம்பித்த திருநாவுக்கரசு அவனது ஸ்டைலான புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டதன் மூலம் அந்த மாணவியை ஈர்த்துள்ளான். அவனை நம்பிய அந்த கல்லூரி மாணவி அவனுடன் மணி கணக்காக கண்விழித்து சாட்டிங் செய்துள்ளார்.

 

fb

 

இந்த நட்பானது ஒருகட்டத்தில் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு செல்ல இருவரும் தொலைபேசியில் நாள்கணக்காக பேசியுள்ளனர். இது காலப்போக்கில் காதலாகவும் மாறியது. அதனையடுத்து திருநாவுக்கரசு அந்த கல்லூரி மாணவியிடம் தன்னிடம் சொகுசு கார் இருப்பதாகவும், வந்தால் பல இடங்களுக்கு சென்று வரலாம் என கூறியுள்ளான். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அந்த மாணவியும் ஆசை ஆசையாக தனது பேஸ்புக் காதலனை சந்திக்க சென்றுள்ளர். கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய வாக்ஸ் வேகன் சொகுசு காரின் பின்புறத்தில் மாணவியும் திருநாவுக்கரசும் அமர முன்பக்கம் திருநாவுக்கரசின் நண்பர்கள் என இருவரும் உட்கார்ந்திருந்தனர்.

 

fb

 

கார் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான் திருநாவுக்கரசு. அப்பொழுது முன் இருந்த நபர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். கொஞ்சம் தாமதமாக சுதாரித்துக்கொண்ட மாணவி கூச்சலிட்டு கத்தியுள்ளார். காரிலேயே அந்த மாணவியை அந்த கும்பல் மிரட்ட,  தான் என்னதான் செய்ய என கேட்டுள்ளார் அந்த மாணவி. முதலில் கழுத்தில் இருக்கும் தங்க செயினை கொடு என கேட்டு பறித்துக்கொண்ட அந்த கும்பல்  கேட்கும்போது எல்லாம் பணம் தரவேண்டும் என மிரட்டிவிட்டு ஊஞ்சவேலன்பட்டி என்ற இடத்தில்  நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றது.

 

அதனையடுத்து அடுத்த நாளே மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த மாணவியை மிரட்ட ஆரம்பித்தது அந்த கும்பல். இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் தந்தையிடமே நடந்ததை கூறியுள்ளார். அந்த மாணவியின் தந்தை உடனே பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகாரளிக்க உடனடியாக ஆக்சனில் இறங்கியது போலீஸ்.

 

fb

 

ஏமாற்றிய அந்த நபரின் முகநூல் முகவரியை கொண்டு அந்த வழக்கில் சதீஷ், சபரீசன், வசந்தகுமார் என்ற மூன்று நபரை பிடித்து அவர்களிடம் மூன்று ஸ்மார்ட் போன்கள், ஒரு வாக்ஸ் வேகன் சொகுசு கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட போன்களை சோதித்ததில் சுமார் 200கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் அந்த மொபைலில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 60 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை முகபுத்தக்கம் மூலம் காதல்வலை வீசி காதலிப்பதாக கூறி நேரில் வரவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு  அதனை படமெடுத்து அதை அவர்களிடமே காட்டி மீண்டும் உல்லாசம் அனுபவிப்பது மற்றும் பணம் கேட்டு மிரட்டுவது என தொடர் செயல்களில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

 

fb

 

இந்த மோசடியில் ஈடுப்பட்ட முதன்மை நபரான திருநாவுக்கரசை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். முன் பின் தெரியாத நபர்களின் நட்பை ஏற்றுக்கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்தால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு சான்றாக  கோவையில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் திக் திக்  என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

 

       

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.