Skip to main content

ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள்  - பிசிசிஐ அறிவிப்பு!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

ipl

 

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்-லில் வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும். 2011 தொடரில் 10 அணிகளும், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் 9 அணிகளும் பங்கேற்றன. அதன் பிறகு ஐபிஎல் போட்டிகள் 8 அணிகளோடு நடைபெற்று வந்தது.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகளைச் சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

எனவே, வரும் 2021 ஐபிஎல் எட்டு அணிகளுடன் மட்டுமே நடைபெறும். மேலும்  குஜராத் மற்றும் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட அணிகள், 2022 ஐபிஎல்-லில் இடபெறும் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.