Skip to main content

ஒரே நாளில் கோடீஸ்வரர்..! ஒரு லாட்டரி சீட்டால் மாறிய இந்தியரின் வாழ்க்கை...

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

அபுதாபியில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவருக்கு லாட்டரி சீட்டு குலுக்கலில் 18 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

 

lottery

 

 

அபுதாபியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று மாதம்தோறும் குலுக்கல் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் சஞ்சய் நாத் என்ற இந்தியருக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 18 கோடி ரூபாய் ஆகும். இந்த குலுக்கலில் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதுபோல அரபு நாடுகளில் இந்தியர்கள் பரிசு வெல்வது முதன்முறை அல்ல. ஏற்கனவே இது போல 10 இந்தியர்கள் கோடிகளில் பரிசு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்