Skip to main content

8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு -  201 கலைஞர்கள்!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

v

 

இயல்பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்புஆறுமுகம், சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இசைப்பிரிவில் எஸ்.ஞானகி, சரோஜா, லலிதா, டிவி.கோபாலகிருஷ்ணனுக்கு  எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, விபி.தனஞ்செயன், சிவி.சந்திரகேகருக்கு பால சரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திரைப்படத்துறையில், நடிகர்கள் பிரபுதேவா, கார்த்தி, விஜய்சேதுபதி, சந்தானம், விஜய் ஆண்டனி, பிரசன்னா, ஸ்ரீகாந்த், சூரி, பொன்வண்ணன்,  பாண்டு, சிங்கமுத்து, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா உள்ளிட்டோர் கலைமாமணி விருதுகள் பெறுகிறார்கள்.

சார்ந்த செய்திகள்