Skip to main content

பெரியார் சிலை அவமதிப்பு- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020

 

trichy district periyar statue dmk mk stalin

பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அதன் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "திருச்சி இனாம்குளத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டிக்கிறேன். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மக்களிடமிருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்வார்களா? பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். பெரியாரை அவமதிப்பதாக நினைத்து செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்துக் கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்