Skip to main content

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்... -கமல்ஹாசன்

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
kamal sarkar tweet


 

சர்கார் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டுமென அதிமுகவினர் சாலை மறியல் போராட்டங்கள், பேனர் கிழிப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,

முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்