Skip to main content

அதிமுக, அமமுக நிர்வாகிகள் மோதல்:தஞ்சையில் பரபரப்பு

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

தஞ்சையில் அதிமுக பிரமுகரை அமமுகவினர் காவல்நிலையம் முன்பே  வைத்து தாக்கியதால் பதற்றம் நிலவியது.

 

ammk admk

 

அதிமுக பிரமுகரான சரவணன் அமமுக பிரமுகர் சத்யமூர்த்தி என்பவரை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் நிலையில், சரவணன் மீது புகாரளிக்க மேற்கு காவல்நிலையத்திற்கு சத்யமூர்த்தி சென்றார்.

 

ammk admk

 

அவர்கூடவே அமமுகவினர் பலரும் காவல்நிலையம் சென்றனர். அப்போது அங்கு வந்த மூர்த்தி என்ற அதிமுக பிரமுகரால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு இரு கட்சியினரும் கூடியதால் பதற்றம் நிலவியது. 

 

இதனையடுத்து அங்கே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்