Skip to main content

முதல்வர் குறித்து கேலி கார்ட்டூன்... முன்னாள் கடற்படை அதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியினர்....

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

shivsena workers hit former navy officer

 

மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்பாகக் கேலி கார்ட்டூன் ஒன்றைப் பகிர்ந்ததிற்காக முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரை சிவசேனா தொண்டர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவள்ளி பகுதியில் 65 வயதான முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா வசித்து வருகிறார். இவர் மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொடர்பாக தனக்கு வந்த கேலி கார்ட்டூனை தனது குடியிருப்புச் சங்கத்தின் வாட்ஸப் குரூப்பில் அனுப்பியுள்ளார். இந்த கார்ட்டூன் சிவசேனா தொண்டர்கள் சிலருக்கும் சென்றுள்ளது.

 

இதனையடுத்து அவரது குடியிருப்புக்குச் சென்ற சிவசேனா தொண்டர்கள் மதன் சர்மாவை துரத்தித் துரத்தி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த மதன் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும், இவரைத் தாக்கிய விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்