"தி.மு.க. சார்பில் போட்டி யிடுவதற்கு பசையான வேட்பாளர் யாரும் இல்லை'’என்று தலைமையிடம் விருதுநகர் மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ். ஆரும் தங்கம் தென்னரசுவும் கூறி, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு வழி விட்டிருக்கின்றனர். ஏனென்றால், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பேச்சைத் தட்டாதவராகவும், அனுசரித்துச் செல்பவராகவும்
விருதுநகர் மாவட்ட காங்கிரஸில் உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி சேர்மன் ஞானசேகரன், விருதுநகர் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி போன்ற சீனியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மாணிக்கம் தாகூர் மீது வருத்தம் கொண்ட கதர்ச்சட்டை கள், ‘புதுமுகம்’ ஒன்றே காங்கிரஸ் தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்கிறார்கள். யார் அந்தப் புதுமுகம் என்று கேட்டால், குவைத் ராஜா மக்கள் சமூக இயக்கம் என்ற பெயரில் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளெல்லாம் வழங்கி, தனி ராஜாங்கம் நடத்திவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த குவைத்ராஜாவைக் கை காட்டுகிறார்கள்.
மாணிக்கம் தாகூரோ “"குவைத்ராஜா விருதுநகர் தொகுதியின் வேட்பாளரா? இது காங்கிரஸ் பேரியக்கம். அ.தி.மு.க. போன்ற கட்சி அல்ல. மாவட்ட, மாநில தலைவர்களுக்குத் தெரி யாமல், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி காங்கிரஸ் வேட்பாளராக முடியும்?' என்று கேட்கிறார். ஆனாலும், டெல்லி தொடர் புள்ள குவைத்ராஜா, நேரடியாகவே காய் நகர்த்தி வருகிறார். "அவரது கொடைவள்ளல் இமேஜ் குறித்து காங்கிரஸ் தலைமை தெரிந்துகொண் டால், அவர்தான் வேட்பாளர்' என்கிறார்கள், மாணிக்கம் தாகூர் அதிருப்தியாளர்கள்.
முக்குலத்தோர் மெஜாரிட்டியாக உள்ள தொகுதி என்பதால், அ.ம.மு.க.வும் வரிந்து கட்டுகிறது. அ.தி.மு.க.வும் காங்கிரஸும் முக் குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரிக்கும்போது, கணிசமான வாக்குகளைக்கொண்ட நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த, விருதுநகர் கிழக்கு மா.செ. வும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழ னைக் களமிறக்கும் யோசனை யில் இருக்கிறது அக்கட்சித் தலைமை. முன்னாள் சபாநாய கர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, ஸ்ரீவில்லி புத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரியின் கணவர் முத்துராஜ் போன்றவர்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளார்கள்.
சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, 1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களில் இத்தொகுதியைக் கைப்பற்றியது ம.தி.மு.க. இரண்டு தடவை இத்தொகுதியின் எம்.பி. யாக டெல்லி சென்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. விருதுநகர் மக்களவை தொகுதியாக மாறிய பிறகு, பாராளுமன்றத்தில் கர்ஜிக்கக் கூடிய வைகோ ஏனோ இத்தொகுதி மக்களின் சாய்ஸாக இல்லை. எம்.பி.யாக இருந்த போது சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற நற்பெயரும், கணிச மாக உள்ள நாயக்கர் சமுதாய வாக்குகளும் அவருக்குப் பலம் சேர்ப்பதாக இருந்தாலும், திருச்சி தொகுதியில் போட்டி யிடும் முடிவில் இருக்கிறாராம் அவர். ஒருவேளை, விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கிவிட்டால், பட்டாசுத் தொழில் முடக்கம் போன்ற அதிமுக்கிய பிரச்சனைகளால் தொகுதி மக்கள் பலரும் அவதிப் படும் நிலையில், வைகோ போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று அடித்துச் சொல் கிறார்கள் மறுமலர்ச்சியினர்.
வைகோ போட்டியிட்டால் வி.வி.ஐ.பி. தொகுதியாகி விடும் விருதுநகர்!