ADVERTISEMENT

“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...

10:42 AM Nov 28, 2020 | rajavel

ADVERTISEMENT

நவம்பர் 27 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கொண்டாடியுள்ளனர். திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிதத்னர். 27ஆம் தேதி காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தியப் பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

ADVERTISEMENT

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் பேசினோம்.

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்கிறார்களே?

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவை அரசியல் விமர்சகர்கள், எதிர்கட்சியினர், பார்வையாளர்கள் என பலரும் பல விதமாக விமர்சித்தனர், துவக்கத்தில். ஏதோ பொழுதுபோக்குக்காக வந்தது போல் சிலர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால், அவர் அரசியலை ரசித்து, உணர்ந்து, ஈடுபாட்டுடன் தான் பயணித்தார், பயணிக்கிறார். அந்த ஈடுபாடு சமீபத்திய "விடியலை நோக்கி" என்ற பிரச்சார பரப்புரை பயணத்தில் தெளிவாக வெளிப்பட்டது, எதிரிகளுக்குப் புலப்பட்டது.

உதயநிதி தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது, அரசியலுக்கு வரவில்லை. தி.மு.கழகம் இரண்டாவது முறை எதிர்கட்சியாக இருக்கும்போது தான் வந்தார். மத்தியில் மோடி பிரதமராக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தார். தமிழகத்தில் மோடியின் செல்லப்பிள்ளை எடப்பாடி ஆட்சியின் போது தான் அரசியலுக்கு வந்தார். எதிர்கட்சியாக, இரண்டு அரசுகளின் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்து தான் வந்தார்.

வாரிசு அரசியல் என்றும் எந்த கொள்கைக்காக அவர் போராடி இருக்கிறார் என்றும் விமர்சனமும் வைக்கப்படுகிறதே?

போராட்டங்களில் கலந்துகொண்டுதான் அரசியலுக்கு வந்தார், தொடர்ந்து கலந்து கொண்டும் வருகிறார். ஆனாலும், வாரிசு அரசியல் என்ற ஓட்டை விமரசனத்தை கடுமையாக சிலர் வைத்தார்கள். அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது, இவர் கடுமையாக உழைப்பார் என்று. அது அடுத்த ஆண்டே நிரூபணமாயிற்று, நாடாளுமன்ற தேர்தல் போது.

உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே அவரது அரசியல் ஈடுபாடும், கொள்கை பிடிப்பும், கடின உழைப்பும் வெளிப்பட்டது. ஆனால், தேர்தல் பரபரப்பில் அதனை பலரும் கவனிக்கவில்லை. அவர்களை இப்போதைய 'விடியலை நோக்கி' பயணம் கவனிக்க வைத்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் போது, அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சார பயணம் அவரது அயராத உழைப்பை வெளிப்படுத்தியது. பிரச்சாரப் பயணத்தில் அவரது பேச்சு யதார்த்தமாக அமைந்து மக்களை கவர்ந்தது, அதே சமயம் கொள்கையில் இருந்து விலகாமல் இருந்தது. அரசின் அவலங்களை பட்டியலிட்டவர், மறக்காமல் எல்லா இடத்திலும் ஒரு விஷயத்தை தன் பேச்சில் குறிப்பிட்டார். அது, "நீட் தேர்வு".

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வு போன்ற கொள்கை விஷயத்தை பேசுவது எளிதல்ல. ஆனால், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை பேசினார். நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட "மாணவி அனிதா" குறித்து பேசும்போது உணர்வு மயமானார். அது அவரது "எதிர்கால சிந்தனையையும், மனித நேயத்தையும்'' வெளிப்படுத்தியது. தேர்தல் வெற்றி, அவரது பிரச்சார பயணத்திற்கு பெரும் அங்கீகாரமாக அமைந்தது.

கட்சியில் பொறுப்புகளை பெற்ற பிறகு உதயநிதியின் செயல்பாடுகள் உடன்பிறப்புகளுக்கு திருப்பி அளிக்கிறதா?

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உடன் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தலில் தீவிரம் காட்டி, பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களை திமுகவில் இணைத்தார்.

"கலைஞர் கடிதங்களை" படிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர்கள் உதயநிதியின் ட்விட்டர் பதிவுகளை கண்டு எல்லையில்லா ஆனந்தம் கொண்டார்கள். தலைவர் கலைஞரின் கிண்டலும், கேலியும் பொங்கி வழிகிறது அவரது ட்விட்களில். பேட்டிகளிலும், பேச்சுகளிலும் பின்னி எடுக்கிறார். "உதயநிதி சாக்லேட் பாய்", என விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார். " ஜெயக்குமார் ப்ளேபாய்", என பதிலளிக்க அண்ணன் ஜெயக்குமார் கப்சிப்.

திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டாரே?

கடந்த காலங்களில் உதயநிதியை அலட்சியமாக பார்த்த எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது. தேர்தல் பரப்புரை துவங்கியவரை கண்டு திணறுகிறார்கள். அவரது 'விடியலை நோக்கி' பயணத்தை முடக்குவதே ஸ்பெஷல் டி.ஜி.பியின் பணியாகிப் போனது. எடப்பாடி தினம், தினம் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவர் அசரவில்லை, பயணத்தை தொடர்கிறார், மக்களை சந்திக்கிறார், சந்திப்பார்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் உதயநிதி ஏற்று நடித்த கேரக்டர், சாப்ட் நேச்சர் கொண்ட சரவணன். தங்களை 'பார்த்தா' சந்தானமாக நினைத்து நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணனில்லை, சமூக அவலங்களை கண்டு கொதிக்கிற கலைஞரின் பராசக்தி "குணசேகரன்" என முத்திரை பதித்து விட்டார்.

தன் பிறந்தநாளுக்கும் 'கருப்பு சட்டை' உடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தெறிக்கிறது! இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை இளைய சூரியனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT