Skip to main content

மாணவர் விக்னேஷ் மறைவுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்த வந்தபோது பாமகவிற்கும், திமுகவிற்கும் மோதல் ஏற்பட்டதா? எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

Published on 13/09/2020 | Edited on 13/09/2020
neet issue - Vignesh ariyalur - udhayanidhi stalin - dmk - s s sivasankar

 

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் உடலுக்கு  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கிருந்த பாமகவினர் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டதோடு அவரை விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து திமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவகங்கரிடம் கேட்டோம்.

 

நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்து போன அரியலூர் மாவட்ட மாணவர் விக்னேஷ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது பா.ம.கவிற்கும், தி.மு.கவிற்கும் மோதல் ஏற்பட்டதா?

 

நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் விக்னேஷ் இறந்த செய்தி வெளியான போது, தி.மு.கவின் பொதுக்குழு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்த உடனேயே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதே போல  உதயநிதி அவர்களும் ட்வீட் வெளியிட்டார்கள்.

 

முதல் நாள் தான் தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உதயநிதி தலைமையில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க கரொனா பெயரை சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதிர்காலத் தலைமுறைக்காக போராடிக் கொண்டிருந்தார் உதயநிதி.

 

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்றாலே எதிர்ப்பு தெரிவிப்பார் உதயநிதி. குறிப்பாக "நீட் தேர்வு" என்றால் அவருடைய எதிர்ப்பு கடுமையாக இருக்கும். மாணவி அனிதாவின் மறைவு அவரை மிகவும் பாதித்து விட்டது. 

 

தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா, உதயநிதியோடு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தவர். அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, உதயநிதியின் கடும் நீட் எதிர்ப்பு குறித்து பேசினேன். "நீங்களும் கவனிச்சீங்களா? பிரச்சாரங்களில் நகைச்சுவையா பேசிக்கிட்டிருப்பார். அனிதா, நீட்ன்னு ஆரம்பிச்சா மனுஷன் அப்படியே மாறிடுவாரு. எமோஷனல் ஆயிடுவாரு", என்று தன் அனுபவத்தை கூறினார் அப்துல்லா. 

 

விக்னேஷ் மறைவு குறித்த செய்தி வந்த உடனேயே எனக்கு அப்துல்லா கூறியது தான் நினைவுக்கு வந்தது. 

 

பொதுக்குழு கூட்டம் முடிந்து, இலந்தங்குழி கிராமத்திலுள்ள விக்னேஷ் வீட்டிற்கு பயணமானேன். விக்னேஷ் தந்தை விஸ்வநாதனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தேன். அலைபேசி அழைப்பு. மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன், எம்.எல்.ஏ அழைத்தார். விக்னேஷ் மரணம் குறித்து விசாரித்தார். "உதயநிதி இது குறித்து பேசினார். மிகுந்த வருத்தமாக பேசினார்", என்றார்.

 

மறுபடியும் காலை அழைத்தார். "விக்னேஷ்க்கு அஞ்சலி செலுத்தனும்னு நினைக்கிறார் உதயநிதி. ஆனா யாருக்கும் சொல்ல வேண்டாம் என சொல்லிட்டார். கூட்டம் கூடி விக்னேஷ் குடும்பத்திற்கு சங்கடம் ஏற்படக் கூடாதுன்னு நினைக்கிறார்", என்றார் எழிலரசன்.

 

கொஞ்ச நேரத்தில் உதயநிதியே அழைத்தார். "நான் கிளம்பி வர்றேன். ஆனா கூட்டம் கூடி அவர்கள் குடும்பத்திற்கு சங்கடம் ஏற்படாம பார்த்துக்குங்க", என்றார். அது தான் அவரது குணம். நீட் தேர்வை எதிர்த்து உயிர் துறந்த குழுமூர் அனிதா வீட்டிற்கு வந்த போதும், இப்படி தான் நடந்து கொண்டார். அனிதா வீட்டில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் போல் அல்லாமல் மிக எளிமையாக நடந்து கொண்டார். தன்னுடைய வருத்தத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார். அதே போல் தான் விக்னேஷ் வீட்டிற்கும் வந்தார்.

 

காரில் செல்லும் போதே, விக்னேஷ் குடும்ப நிலவரங்களை கேட்டறிந்தார். நீட் தேர்வால் தொடர்ந்து ஏற்படும் மாணவர்களின் தற்கொலை குறித்து வருத்தப்பட்டார். 

 

செந்துறையை நெருங்கும் போதே தொடர் அலைபேசி அழைப்புகள். "உதயநிதி வருவதற்குள் விக்னேஷ் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பா.ம.கவில் ஒரு குரூப் துடிக்குது. அக்கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் தான் இந்த வேலைய செய்யறாங்க". 

 

மருதூரை தாண்டி இலந்தங்குழி கிராமத்தை அடைந்தோம். விக்னேஷ் வீட்டின் முன் இறங்கினோம். போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் "கொஞ்சம் இருங்க", என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பத்து பேர் விக்னேஷ் உடலை கைப்பாடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். திமுகவினர் முன்னேறி செல்ல இருதரப்புக்கும் இடையே போலீஸார் நின்றனர். 

 

உதயநிதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேண்டுகோளை ஏற்று அங்கேயே நின்று விட்டார். நான் முன்னேறி சென்று கூட்டத்தை விலக்கினேன். அதற்குள் உடலை தூக்கிக் கொண்டு, அமரர் ஊர்தியை நோக்கி ஓடியது அந்தக் கூட்டம். இறந்த விக்னேஷின் உடலுக்கு அவமரியாதை செய்தது அந்தக் கூட்டம். அவரது பெற்றோர் முழுமையாக சடங்கு செய்யக் கூட விடவில்லை அந்தக் கூட்டம். கேவலமாக நடந்து கொண்டார்கள்.

 

"பரவாயில்லை. நாம அவங்க அப்பா, அம்மாவ பார்த்து ஆறுதல் சொல்வோம்", என்றார் உதயநிதி. அந்த பதற்ற சூழலிலும் கோபப்படாமல் முடிவெடுத்தார். 

 

வீட்டினுள் சென்றோம். அழுதுக் கொண்டிருந்த விக்னேஷின் அப்பா விஸ்வநாதனை தொட்டேன். நிமிர்ந்து உதயநிதியைப் பார்த்த விஸ்வநாதன் வெடித்து அழுதார். கையைப் பற்றிக் கொண்டார். "அய்யோ, தலைவர் மகன்லாம் வந்திருக்கீங்க. என் மகன் போய்ட்டான்யா", என்று கதறினார். உதயநிதி அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார். அடுத்த அறையில் மயக்க நிலையில் இருந்த விக்னேஷின் அம்மாவை பார்த்து வேதனையடைந்தார். 

 

விக்னேஷ் தந்தையிடம் திமுக சார்பாக 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார். "தைரியமா இருங்க. உங்க இழப்புக்கு ஈடு கிடையாது. இருந்தாலும் தலைவர் தி.மு.க சார்பா இந்த உதவியை வழங்க சொன்னார். அடுத்த மகன நல்ல முறையில் படிக்க வைங்க. நாங்க உங்களுக்கு உறுதுணையா இருப்போம்", என்று தேற்றினார்.

 

உதயநிதி நினைத்திருந்தால் அலைபேசியில் ஆறுதல் சொல்லி விட்டு சென்னையிலேயே இருந்திருக்கலாம். நீட் தேர்வை உணர்வுப்பூர்வமாக எதிர்ப்பவர் என்ற காரணத்தால் தான், 600 கிலோமீட்டர் பயணித்து நேரில் வந்து ஆறுதல் சொன்னார். அதிலும் முதல் நாள் தான் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை நடத்தி இருந்தார். அந்த உணர்வின் காரணமாகத் தான் பல்வேறு பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு வந்தார். அவரை அஞ்சலி செலுத்த விடாமல் செய்வதை ஏதோ பெரிய அரசியல் நடவடிக்கை என ஒரு கூட்டம் நடந்து கொண்டது வேதனை. விக்னேஷ் குடும்பத்தார் அல்லாத ஆட்கள் தான் இந்த செயலை செய்தவர்கள்.

 

நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து போராடும் இயக்கம், இனி போராடப் போகும் இயக்கமும் தி.மு.க தான். எதிர்காலத்தில் நீட் தேர்வை ரத்து செய்யப் போகும் இயக்கமும் தி.மு.க தான். அதன் பிரதிநிதி தான் உதயநிதி அவர்கள். 

 

விக்னேஷ் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் மத்திய, மாநில அரசுகள் தான்.  பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நோக்கில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள சுற்றுபயணத்தில் இருக்கிறார். மற்ற சில கட்சியினர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்கள். விக்னேஷுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தான் உணர்வோடு ஓடோடி வந்தார். 

 

தி.மு.க தான் எப்போதும் உதவிக்கு வரும், உறுதுணையாக இருக்கும்! இவ்வாறு கூறினார். 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.