முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ஒருவர், இன அழிப்பு நடைபெற்றுகொண்டிருந்த சமயத்தில் என்ன நடந்தது என்று தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதி கட்ட போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பிய போதும் அப்போதைய தில்லி தலைமையும், தமிழக தலைமையும் விரும்பவில்லை என்று தெரிவித்து இருக்கிறது. அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன். அவ்வாறு சமதானம் ஏற்பட்டு தமிழர்களுக்கான ஒரு ஆட்சி அமையுமானால், அது அப்பழுக்கற்ற, யஞ்ச லாவண்யம் அற்ற தூய்மையானதாக இருக்கும். தன் அண்டை நாடு இப்படி இருந்தால் இங்கிருப்பவர்களுக்கு அது இடைஞ்சலாக இருக்கும், தங்களால் கொள்ளை அடிக்க முடியாது. அதனால்தான் இவர்கள் போரை நிறுத்துவதற்கான முயற்சியை ஆதரிக்கவில்லை. இல்லை என்றால் அங்கு தமிழக மக்களை பாதுகாக்கும், ஒரு அருமையான ஆட்சி அமைந்திருக்கும். பிரபாகரனை ஒருமுறை நேரில் பார்த்தால் போதும் அவருக்காக யாரும் உயிரை கொடுப்பார்கள். நான் அவரை நேரில் சந்தித்த போது அதைத்தான் நினைத்தேன். அவர் இலங்கை தமிழர்கள் படும் கஷ்டங்களை என்னிடம் சொல்லியபோது கீழே குனிந்து அழுதிருக்கிறேன்.
ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்துவைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாக சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் அருமையானது. தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார். நான் தலைவரை சந்தித்த காலத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் ஆளாக இருந்தேன்" என்றார்.