இந்நிலையில் தேவி தனது இரண்டாவது கணவர் மூலம் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இரண்டாவது கணவருடன், தேவி சந்தோசமாக கிழக்கு லண்டன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். தேவி மற்றும் அவருடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் இருவரும் கிழக்கு லண்டனில் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தபோது தேவியின் முதல் கணவரான ராமனோஜ் வீட்டிற்குள் வில்லும் அம்பும் ஏந்தி கொண்டு அவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சென்றிருக்கிறார். அப்போது பயந்து போன தேவியும், இம்தியாஸும் வீட்டில் ஆளுக்கொரு புறம் ஓடியுள்ளனர். அப்போது முதல் கணவர் ராமனோஜ் எய்த அம்பு தேவியின் இதயத்தை துளைத்தது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தேவியின் வயிற்றில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு எடுத்தனர் அதனை அடுத்து சிறிது நேரத்திலேயே தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் போலீசார் தேவியை கொலை செய்த அவரது முதல் கணவரை கைது செய்து விசாரணை செய்தனர். தற்போது தேவியை முதல் கணவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் வெளிவந்துள்ளது. தேவியும் அவரது இரண்டாவது கணவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர்களை கொலை செய்வதற்கு அவர்களின் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு அறையில் ஒரு மாத காலமாக பதுங்கி இருந்து அவர்களை கண்காணித்து வந்தேன் என்று விசாரணையில் கூறியுள்ளார். மேலும் தேவியை கொலை செய்வதற்காக அம்பு வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவியின் கொலை குறித்த தகவல் தற்போது வெளியாகி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.