தற்போது துபாயில் பொறியாளராக வேலை பார்க்கும் இவர், "சிவில் என்ஜினியரிங் லேனர்ஸ்" என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் படத்தை பதிவிட்டு, இதன் பெயர் 'சுத்தியல்' உங்க ஊரில் இதற்கு என்ன பெயர்? இதை வைத்து எதையாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும், கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் பட்டு இது காயம் ஏற்படுத்தியது (பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நேசமணி அவரது தலையில் சுத்தியல் விழுந்ததை) என குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விக்னேஷ் பிரபாகரை தொடர்பு கொண்டு பேசினோம். "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சுத்தியலால் அடித்தால் டங்..டங்.. சத்தம் வரும்னு போட்டது பிரபலமாகும்னு எதிர்பார்த்தேன். ஆனால், நேசமணி கேரக்டர் அதை ஓவர்டேக் பண்ணியிருக்கிறது. நினைச்சுக்கூட பார்க்கலை, விளையாட்டுக்காக பதிவிட்ட கமெண்ட் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதை வச்சு மீம் கிரியேட்டர்கள் செம்மையா கிரியேட்டிவ் பண்ணி பதிவுகளை வெளியிட்டிருக்காங்க. நான் போட்ட பதிவில நேசமணி பத்தி நலம் விசாரிப்பவரும் என் நண்பர்தான். அவருக்கு நக்கலுக்காக சீரியஸாக கேட்க, நானும் அதே டோன்ல ரிப்ளெ பண்ணினேன். இது இப்படி டிரென்ட் ஆகும்னு எதிர்பார்க்கல" என்றார்.
நாமும் பிரார்த்திப்போம் நேசமணி(?) குணமடைய.!