Skip to main content

நாமும் நேசமணிக்காக பிரார்த்திப்போம்

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 

கடந்த சில மாதங்களாக பெரும் அரசியல் களேபரங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது இணைய உலகம் இந்தியாவின் மாபெரும் தேர்தல் காய்ச்சல் இப்பொழுதுதான் சற்று குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. 

 

இதனை உணர்த்தும் வகையில் தமிழர்கள் என்ற #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். இது தமிழர்களின் நகைச்சுவை உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது.


 

யார் நேசமணி என்ன ஆனது நேசமணிக்கு:
 

ஃப்ரெண்ட்ஸ் படத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் கதாப்பாத்திரத்தின் பெயர்தான் நேசமணி. அதில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வடிவேலுவின் தலையில் 'சுத்தியல்' விழுவது போன்று வரும் நகைச்சுவைக் காட்சி மிகப் பிரபலம். 

அது இப்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகக் காரணம்,
முகநூலில் இருவர் செய்த கமெண்ட் தான், 

ஒரு வெளிநாட்டு முகநூல் பக்கம் 'சுத்தியல்' படத்தை பதிவிட்டு இதன் பெயர் உங்கள் நாட்டில் என்ன என்பது போல ஒரு பதிவை போட.. 

அந்தப் பதிவின் கமெண்ட் பகுதியில் ஒருவர் இந்த நகைச்சுவைக் காட்சியைக் கூறவே. வட இந்தியர் ஒருவர் அதை உண்மை என நினைத்து #pray_for_nesamani என்று பதிலுக்கு கமெண்ட் செய்ய விஸ்வரூபம் எடுத்தது #Pray_For_Nesamani.
 

இந்திய அளவில் 87000க்கும் அதிகமானோர் இந்த ஹேஷ்டேகைப் பயன்படுத்தியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்திய அளவில் முக்கியமான பிரபலங்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு இந்த ஹேஷ்டேக் உடன் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் இதே நகைச்சுவை காட்சியின் ஒலியை அவெஞ்சர்ஸ் திரைக் காட்சியோடு இணைத்து விக்னேஷ் என்பவர் எடிட் செய்த வீடியோ ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.


 

தமிழகம் மற்றும் இந்திய அரசியல் களம் மிக பரபரப்பாகவும்  இறுக்கத்துடனும் சென்றுகொண்டிருக்கும் வேளையில் இது போன்ற சிறிய இளைப்பாறும் நிகழ்வுகளை தட்டிக் கழித்து விடாமல் அந்த கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதே சிறப்பு என்கின்றனர் சில இணையவாசிகள்.
 

'மீம்ஸ் தேசத்தின் முடிசூடா மன்னன்' என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல வடிவேலு என்னும் கலைஞனால் போர்க்களத்திலும் புன்னகைகள் பூக்கும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.