நக்கீரன் ஆசிரியர் தன்னுடைய உரையில் பேசியதாவது, " இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் இந்த சிறப்பான நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்படுள்ளேன். இந்த நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நடைபெறுகிறது என்று சொன்னார்கள். இதுபோன்ற கலை விழாக்கள் தொடர வேண்டும். இந்த விழாவிற்கு வருவதற்கே மிகவும் கடினமான சூழ்நிலைகளை கடந்துதான் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
என்னோடு 30 வருடங்களாக இருக்கும் நண்பர் ஒருவருடைய அம்மா தவறிவிட்டார், எங்கள் ஊருக்கு அருகில் நாளைக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதற்காக நான் சென்றுவிட்டேன் என்றால், பத்திரிக்கையில் பெயர் போடாததால் அவர் வரவில்லை என்று சொல்லவும் வாய்ப்புள்ளது. எதற்கு நாமே அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நேற்றே அவசர அவசரமாக அந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேராக இங்கே வந்துள்ளேன். இந்த மாதிரியான நல்ல விஷயங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
அதுவும் கேரள சமாஜம் மின்சாரத்துடன் கூடிய அரங்கை வழங்கியுள்ளதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. அதையும் தாண்டி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பல பேர் வாயில் நக்கீரன் என்ற வார்த்தையை வர வைக்கவே நாம ரொம்ப கஷ்டபட வேண்டி இருக்கிறது. நம்மை கஷ்டப்படுத்ததான் ஒரு ஆள் போனா இன்னொரு ஆள் வந்துகிட்டு இருக்காங்க. நம்முடைய வேலை அப்படி. எனவே இந்த மாதிரியான நல்ல நிகழ்ச்சிக்கு நக்கீரன் எப்போதும் துணை நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.