Skip to main content

“பத்திரிக்கையாளரை தாக்குபவர் மீது குண்டர் சட்டம்!” -விருதுநகர் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

jkl

 

நக்கீரன் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும்  போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சியில் நடந்த  கொலைவெறி தாக்குதலைக் கண்டித்தும், குண்டர்களை ஏவிய  கள்ளக்குறிச்சி  சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,      விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில்,  21-ஆம் தேதி  காலை 11 மணிக்கு,    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், செயலாளர் மணிகண்டன்  முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் பலரும்  கலந்துகொண்டனர்.  

 

மேலும், பத்திரிக்கையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளர் விடியல் வீரபெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் நகர செயலாளர் செல்வம், நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை  ஆற்றினார்கள்.  சங்கப் பொருளாளர் செந்தலைக்குமார் நன்றி கூறினார்.  


 
கண்டன உரை நிகழ்த்திய அரசியல் கட்சி நிர்வாகிகள்  “தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களைத் தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும்.  மடியில் கனம் இருப்பதால்தான், கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர்,  பத்திரிக்கையாளர்கள் இருவரைத் தாக்கும் செயலில் இறங்கிவிட்டார்கள். கொடூரத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பள்ளி நிர்வாகிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம், கொலையா? தற்கொலையா? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்குள், சக்தி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் வெளிவந்து, ரவுடிகளைத் தூண்டிவிட்டு நக்கீரன் செய்தியாளர்களைத் தாக்கியிருக்கின்றனர். பட்டப் பகலில்  பொதுவெளியில் பத்திரிக்கையாளர்களைத் தாக்குவதற்கே அஞ்சாதவர்களாக அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் இருக்கின்றனர். இத்தகையோர் பிடியில் கல்வி வியாபாரம் தமிழகத்தில் நடக்கிறது. மாணவர்கள் வேறு  சிக்கியிருக்கின்றனர். அதனால், அந்தப் பள்ளியில் மாணவர்கள் மர்மமாக மரணம் அடைவது தொடர்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டும். 


 
பத்திரிக்கையாளர்களைத் தாக்கும் சக்தி பள்ளி நிர்வாகத்தினரே.. எங்களையா அடிக்கின்றீர்கள் என வெகுண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒன்றுசேர்ந்து உங்கள் பள்ளிக்கு திரண்டு வந்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு விளங்காது. அரசியல் கட்சிகள் மக்களுக்கானது மட்டுமல்ல. பத்திரிக்கையாளர்களை மிரட்டினால், அவர்களுக்குத் தோள்கொடுத்து அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கும். பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதும் துணைநிற்கும். கள்ளக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் அந்தப் பள்ளிக்கு ஆதரவாக  நடந்துகொள்வதைப் பார்க்கும்போது, அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த அளவுக்கு காவல்துறையினரை கவனித்துவருகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 

 

l

 

தமிழக அரசுக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே சுணக்கம் காட்டிவருகிறது. அரசியல் பலமோ, பணபலமோ, ஏதோ ஒன்று அந்தப் பள்ளி நிர்வாகத்தினரின் பின்னால் இருக்கிறது. அந்த தைரியத்தில்தான் பத்திரிக்கையாளர்களைத் தாக்கியிருக்கின்றனர். இந்த நிலை நீடித்தால்,  பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக, அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தும். இதை ஒரு எச்சரிக்கையாகவே விடுக்கிறோம்.” என ஆவேசமாகப் பேசினர்.  

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பாக, திருச்சுழி தொகுதி - காரியாபட்டி பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில், சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நக்கீரன் பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் அனைவர் மீதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  
கள்ளக்குறிச்சியில் நக்கீரன் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல ஊர்களிலும் எழுச்சியோடு கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடந்துவருகின்றன.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது