ADVERTISEMENT

தமிழகத்தை தட்டி எழுப்பிய நக்கீரன்!

01:58 PM Mar 18, 2019 | Anonymous (not verified)

ரு காணொலி, கோடிக்கணக்கான தமிழர்களைத் தட்டி எழுப்பியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் பற்றிய நக்கீரன் ஆசிரியரின் தார்மீக கோபத்துடனான வார்த்தைகள் நிறைந்த வீடியோ தமிழகத்தின் குரலாக ஒலித்து சமூக வலைத்தளங்கள் வழியே ஒவ்வொருவர் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் முதல், பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டும் அந்த உரை... போராட்டக் களத்தில் ஆயுதமாகியுள்ளது.

இரா.ஜவகர் -மூத்த பத்திரிகையாளர்


""அந்த அலறல் குரல் தூங்க விடாமல் செய்த நிலையில்... அவர் களுக்காக குரல் கொடுக்கவும் நீதி கேட்கவும் நான் இருக்கிறேன் என்பதுபோல ஒலிக்கிறது தம்பி கோபாலின் தார்மீகக் கோபக்குரல். அதைக்கேட்ட பிறகுதான் இன்று நிம்மதியாகத் தூங்கினேன்.

நெல்லை கண்ணன்


தம்பி... நிறைய பிள்ளைகளை அந்த நாய்கள்ட்ட இருந்து காப் பாத்திட்டீங்கய்யா... வேற எதுவும் வெளியே வந்துடக்கூடாதுன்னு பதறுறாங்களே... கேஸ் போட்டுருக் காங்களா... நான் வெளிய வந்து பேசுவேன்... நாங்க எல்லாரும் உங்க பக்கம் இருக்கோம்.

கனிமொழி எம்.பி.

பொள்ளாச்சி கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் இதழின் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால், தங்களுடைய நிருபரை பொள்ளாச்சி ஜெயராமன் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்ந் திருக்கும் நீங்கள், மக்களின் கேள்வியை பத்திரிகையாளர்கள் மூலமாக முன்வைத்தால் அதற்கு பதில்சொல்ல வேண்டியது உங்களுடைய கடமை. என்னைக் கேள்விகேட்க நீ யார் என்று கேட்டிருக்கிறீர்கள். பத்திரிகையை மிரட்டுகிறாய் என்றால் உங்களுக்கு என்ன திமிர்?

சுப.வீரபாண்டியன் -திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இது நக்கீரனின் அறச்சீற்றம்! பல சான்றுகளோட எத்தனையோ சம்பவங்களைப் பற்றி செய்தியா பண்ணியிருக்கீங்க. ஆனா, இது அத்தனை சாதாரண விஷயமல்ல. நக்கீரனுக்கு என் தலை வணக்கம்!

வன்னியரசு -விடுதலை சிறுத்தைகள் கட்சி

அண்ணன்… உங்க அறச் சீற்றத்தை வீடியோவுல பார்த்து ஆடிப் போயிட்டேன். ஒரு மனுஷனுக்குள்ள இத்தனை கோபம். அந்தக் கோபத்தைப் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்துப்போய் நின்னோம். சாதாரண செய்தியாக இதைக் கடந்துபோகாமல், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், பாதிக்கப் பட்டவர்களோடு கரம் சேர்க்கும் இயக்கமாய் நக்கீரன் மாறியதைப் பார்த்தேன். நக்கீரன் தந்த நம்பிக்கைதான் இந்த விவகாரத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு மிகப்பெரிய ஆயுதம்!

வே.மதிமாறன் -திராவிட இயக்க எழுத்தாளர்

ஜெயலலிதாவோடு கடும் பகை இருந்தபோதும் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெ. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது நக்கீரனின் அரசியல் கண்ணோட்டத்திற்கு அடையாளம். நிர்மலாதேவி மாணவிகளை விபச்சாரத்திற்கு அழைத்ததையும் கவர்னர் மாளிகை தொடர்புகளையும் அம்பலப்படுத்தி யும், பிறகு நிர்மலாதேவியின் உயிரை பாது காத்ததிலும் நக்கீரனின் பங்களிப்பு முக்கிய மானது. இப்போதும், எல்லோரும் பேசமறுத்த பொள்ளாச்சி பயங்கரத்தை, முதன்மை பிரச்சினையாக மாற்றியதும் நக்கீரனே. இதுவும் தமிழக ஆட்சி அதிகாரத்தை திசை மாற்றும். நக்கீரனையும், ஆசிரியர் கோபாலையும் தவிர்த்து 30 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது.

குஷ்பு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்


நக்கீரன் இந்த வீடியோவை வெளியிட்டது தவறு என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், கோயம்புத்தூர் எஸ்.பி. பாதிக் கப்பட்ட பெண்ணின் பெயரையே வெளி யிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியே வரவில்லை என்றால் பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்திருப்பார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்ற விழிப்புணர்வை நக்கீரன் வெளியிட்ட வீடியோ நம் பெண்களுக்குத் தந்திருக்கிறது.

எவிடென்ஸ் கதிர் -சமூக செயற்பாட்டாளர்

பாலியல் சீண்டல் விவ காரங்களில் உச்சநீதிமன்றம் விதித் துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப் பட்டே பொள்ளாச்சி கொடூர விவகாரத்தில் நக்கீரன் வீடியோவை வெளி யிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை நக்கீரன் பாதுகாத்திருக்கிறது. குற்றவாளிகளை அடையாளம் காட்டி யிருக்கிறது. அரசியல், அதிகார பலம் பொருந்திய இந்த வழக்கை வெளியில் கொண்டுவருவது அத்தனை எளிய காரியமல்ல. தனிமனித வலியை சமூக வலியாக மாற்றுவதே ஒரு பத்திரிகையின் பணி.

சுபா எழுத்தாளர்


நீங்க இந்த விஷயத்தைக் கையில் எடுக்கலைன்னா அப்படியே அமுங் கிப் போயிருக்கும். கத்தி, அருவா, வெட்டுக்குத்துன்னு நிறைய க்ரைம் கதைகளை நாங்க எழுதியிருக்கோம். ஆனா, எங்களையே அந்த வீடியோ கலங்க வைச்சிட்டது. என் நெஞ்செல்லாம் அடைச்சிருச்சு. "பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது அண்ணா'ன்னு கெஞ்சுற புள்ளைய சீரழிக்க எப்படி அந்தப் பாவிங்களுக்கு மனசு வந்துச்சோ. இதைத் துணிச்சலோட வெளியே கொண்டுவந்த நக்கீரனுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்!

காந்தி கண்ணதாசன்

நீங்க பொள்ளாச்சி விவகாரம் சம்பந்தமா வீடியோவுல பேசியது எதுவுமே, பத்திரிகை விளம்பரத் துக்கானது கிடையாது. ஒரு தகப்பனா, ஒரு சகோதரனா நீங்க நின்னு பேசி யதை என்னால மறக்க முடியலை. எல்லோரோட உணர்ச்சிகளையும் தூண்டி விடலாம். நீங்கதான் மத்தவங்க உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்கீங்க. வீடியோவோட இறுதியில மனசோட அடியாழத்துல இருந்து பேசுனீங்க. மத்த மீடியாக்களைப் போல வெறுமனே செய்தியோட நிறுத்திக்காம, பிரச்சனைக்கான தீர்வை சொன்னதுக்காகவே நக்கீரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன்.

கவிதா பாரதி -இயக்குநர்


பெருங்கொடுமையை வெளிக் கொண்டு வந்த நக்கீரனின் செயல் பாராட்டுக்குரியது. நக்கீரன்கோபால் அண்ணனுக்குத்தான் இந்த துணிவு வரும்.

டான் அசோக், எழுத்தாளர்

நக்கீரன் கோபால் அண்ணனின் காணொலியை பார்த்தேன். பதற் றத்தில் அவர் கைகள் நடுங்குகிறது. கோபம் அவர் குரலில், வார்த்தை களில் வெளிப்படுகிறது. நக்கீரனும் இல்லை என்றால் தமிழ்நாடு நக்கிக்கொண்டுதான் போகும்.

பியூஷ் மனுஷ், சமூக செயற்பாட்டாளர்


பொள்ளாச்சி விவகாரம் 25 நாட்களாக அப்படியே இருந்தது. நக்கீரன்தான் அந்த வீடியோவை -பாதிக்கப்பட்ட பெண்களின் முகம் அனைத்தையும் மறைத்து வெளியிட்டது. நக்கீரன் கோபால் அவர்கள் அந்த வீடியோவிலேயே “ரொம்ப வேதனையுடன்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்’’ என மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் இன்னும் பல ஆயிரம், லட்சம் பெண்களின் உயிர்களைக் காக்க முடியும்.

அமீர், இயக்குநர்

சமூகத்தில் நடக்கும் பேரவலங்களை பலரும் கடந்து சென்று கொண்டிருக்கும்போது, யாராவது அவற்றை வெளிக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நக்கீரன் அதைத்தான் செய்தது. ஒரு ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி, ஒரு பெண்ணின் தகப்பனாக நக்கீரன் கோபால் அந்தப் பணியைச் செய்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

பொன்வண்ணன் திரைக்கலைஞர்

யாருக்கும் தெரியாமப் போயி ருக்கக்கூடிய விஷயத்தை வெளிக் கொண்டுவந்து பெரிய அலர்ட்டை உண்டு பண்ணிட்டீங்க. இதை ஒரு இஷ்யூவா மட்டுமே பார்க்காம, பெரியளவுல மிஸ்யூஸ் பண்றதைத் தடுத்துருக்கீங்க. "நீட்'ல பாதிச்ச அனிதாவின் முகமும், பொள்ளாச்சி சம்பவத்துல பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தமும் நம்ம உறவுகள்தான்னு நினைக்கும்போது மனசு பதைபதைக்குது. நீங்க இந்த இஷ்யூ மட்டுமில்லாம, எதிர்கால சமூகம் சோஷியல் மீடியாக்களால எந்தளவுக்கு பாதிக்கப் பட்டிருக்குன்னு கேள்வியைக் கேட்பதற்கான பாதையை உண்டு பண்ணிட்டீங்க. என்ன பண்றீங்கன்னு பெற்றோரை புள்ளைங்க கிட்ட கேட்க வைச்சிருக்கீங்க!

சீனுராமசாமி, இயக்குநர்


சமூக அவலங்களை, அநீதிகளை துணிச்சலாக அம்பலப் படுத்துவதில் எனக்கு தெரிந்து நக்கீரன் இதுவரை பின்வாங்கிய தில்லை. நக்கீரன் கோபால் இந்த வீடியோவை வெளியிட்டது அவரின் பத்திரிகை விற்பனையை கூட்டுவதற்குதான் என்ற பேச்சு களை எல்லாம் கேட்டேன். ஆனால், இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோ விற்கும், அச்சு பத்திரிகை விற்பனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இப்படி அவரின் நோக்கத்தை களங்கப்படுத்துவது தவறு. தமிழ் கூறும் நல் உலகம் அவரின் முயற்சிக்கு எப்போதும் துணைநிற்கும்.

தம்பி ராமையா, நடிகர்


பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்க நக்கீரன் மேற்கொண்ட நல்ல முயற்சி இது. எந்த விஷயமாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்று சொல்லு வார்கள். அந்த வகையில் நக்கீரன் இன்று தொட்டுவைத்த இந்த புள்ளி, புயலாக மாறி தமிழகம் முழுக்க பெண்களுக்கு ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், பெண்களைப் பெற்ற அனைவரும் நக்கீரனுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

மகிழ் திருமேனி, இயக்குநர்

இரத்தத்தை உறையவைக்கும், கொதிக்கவைக்கும் பொள்ளாச்சி வன்கொடுமை நிகழ்வை நக்கீரன் ஆசிரியர் கோபால், துணிச்சலாக எவ்வித வளைந்து கொடுத்தலுக் கும் ஆளாகாமல், தயக்கத்துக்கும் அடி பணியாமல் தைரியமாக அம்பலப்படுத்தியதன் காரணமாகத்தான் இன்று தமிழ்நாடே இந்த செய்தியை கேட்டு பதறிப்போயும், கொதித்துப்போயும் இருக்கிறது. நீண்டகால நக்கீரன் வாசகராக நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.

ரஞ்சித் ஜெயக்கொடி, இயக்குநர்


ஒரு பெரிய அபாயம் ஒன்று நடக்கும்போது அதனை யாராவது ஒருவர் வெளியுலகத்திற்கு சொல்லிதான் ஆகவேண்டும். அந்தப் பணியை நக்கீரன் செய்கிறது என்பதில் மகிழ்ச்சி என்பதைவிட ‘பெருமை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

பனிமலர், பத்திரிகையாளர்

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் வீடியோ வெளியிட்டது ஒரு வகையில் சரிதான். ஒருவேளை இந்த வீடியோ வெளிவராமல் இருந்திருந்தால் இன்று இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT