பிரபுவின் தகப்பனார் ஐய்யப்பா. தொடக்க காலத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளவர். இவர் தியாகதுருவம் அதிமுக ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்தார். பிரபுவின் தாயார் கைலம்மாள் ஒன்றிய துணை சேர்மனாக இருந்தார். பிரபு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தார். ஐயப்பா கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார், ஆனால் பிரபு பி.இ., பட்டதாரி என்பதால் அவருக்கு சீட் ஒதுக்கியது அதிமுக மேலிடம். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் காமராஜை விட சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார்.
தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிரபு செய்தியாளர்களிடம், மக்கள் ஆதரவு உள்ளதால் டிடிவி உடன் சேர்ந்தேன். டிடிவி தினகரனின் சேவை நாட்டுக்கு தேவை. மேலும் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் அணிக்கு வருவார்கள். கள்ளக்குறிச்சியை தலைமையாக கொண்டு மாவட்டமாக அறிவிக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த முயற்சியில் எடுக்கவில்லை. மேலும் தொகுதி தேவைக்காக பலமுறை அமைச்சர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் விரைவில் டிடிவி அணியில் உள்ள ஒருவர் முதல்வராவார் எனவும் தெரிவித்தார்.