Skip to main content

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பதிலளிக்க தேவையில்லை:சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் ஒரு வாரத்திற்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

 

tn

 

அதனையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இந்த நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

tn

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம்  வழக்கறிஞர் மூலமாக மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் உச்சநீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என நம்புகிறேன். அப்படி இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது என சட்டப்பேரவை கருதினால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடையும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு உங்களுக்கும் பொருந்தும் எனவே கள்ளக்குறிச்சி  எம்.எல்.ஏ பிரபு இது தொடர்பாக பதிலளிக்க தேவையில்லை என  சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்ற உத்தரவு எனக்கும் பொருந்தும்... இல்லையெனில் காலஅவகாசம் வேண்டும்...கள்ளிக்குறிச்சி எம்.எல்.ஏ மனு

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி சந்தித்து  கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  புகார் அளித்தனர்.  

 

அதனையடுத்து சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் ஒரு வாரத்திற்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

 

kallakurichi mla

 

அதனையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இந்த நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம்  வழக்கறிஞர் மூலமாக மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் உச்சநீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என நம்புகிறேன். அப்படி இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது என சட்டப்பேரவை கருதினால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான காலஅவகாசம் இன்றுடன்  முடிவடைவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

அரசு கொறடா உத்தரவின் படியே செயல்படுவேன் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ...!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

அதிமுக கொறடா ராஜேந்திரன் தமிழக சபாநாயகர் தனபாலிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ,அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் அமமுகவில் பொறுப்பு வகிப்பதாகவும் அதிமுகவுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகவும் எனவே இந்த மூன்று பேர்  மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

prabhu


இதுகுறித்து கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினர் பிரபு எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள்  அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்கவில்லை. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு ஆதரவாகதான் வாக்களித்துள்ளோம். அமமுக என்பது அதிமுகவின் அங்கம்தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.


எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டிஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன். அதிமுக எம்எல்ஏ வாக தான் செயல்படுகிறேன். நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்துவிடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின்படியே செயல்படுவேன். அதிமுகவை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை அதிமுக நல்ல தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும் அதிமுக உறுப்பினர்தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதுதான் அதிமுகவில் உள்ள அனைவரின் எண்ணம். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பாடு படுவோம்” என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.