ADVERTISEMENT

எகிப்து பிரமிடுக்குள் பூனைகளும் வண்டுகளும் மம்மிகளாய்!

11:05 AM Nov 12, 2018 | Anonymous (not verified)

எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்குள் இடம்பெற்றுள்ள கல்லறைகள் அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்தே அற்புதங்களின் மையமாக இருக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அலெக்ஸாண்டர் பிரமிடுகளுக்குள் நுழைந்து தங்கத்தையும் வைரத்தையும் கொள்ளையடித்தான். நெப்போலியன் சென்றபோது அவனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை எனக் கூறப்படுவதுண்டு.


ஆனால், தொல்லியல் நிபுணர்களுக்கு அதன்பிறகு மிகப்பழமையான வரலாற்று பொக்கிஷங்கள் கிடைத்தன. இப்போதும் அங்கு தொடரும் ஆய்வுகளில் பல அற்புதமான விஷயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.


கடந்த ஆறுமாதங்களுக்கு முன் நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் உள்ள யுஸெர்காஃப் மன்னரின் பிரமிடு வளாகத்தில் உள்ள திறக்கப்படாத ஒரு அறையை திறந்தார்கள். அங்கு நடந்த ஆய்வில், இதுவரை கிடைக்காத சில மம்மிகள் கிடைத்தன.

12க்கும் அதிகமான பூனைகளும், எகிப்தியர் புனிதமாக கருதிய ஒருவகை வண்டுகளும் பதப்படுத்தப்பட்டிருந்தன. எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக கருதினர். பூனைகளின் கடவுள் பாஸ்டெட் என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கடவுளுக்கு அர்ப்பணமாகவே இந்த மம்மிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இதுவரை இந்த மம்மிகளை திறக்கவில்லை. எகிப்தை ஆட்சி செய்த ஐந்தாவது பேரரசுக் காலத்தில் அதாவது கி.மு. 2500க்கும் கி.மு.2350க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த இந்த மம்மிகளை சில வாரங்களில் திறந்து பார்க்கப் போவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த மம்மிகள் இருந்த கல்லறைக்குள் டஜன் கணக்கில் பூனைகளின் மம்மிகளும், வண்ணம் பூசப்பட்ட பூனை சிலைகளும், ஒரு வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை சிலையும் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூனைகள் மற்றும் வண்டுகளின் மம்மியை திறக்கும் நாளை தொல்லியல் நிபுணர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT