இந்த நஷ்டத்தில் முதல் இடத்தில் இருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கி 6,441.13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பேங்க் ஆப் இந்தியா 2,224.68 கோடியும், பேங்க் ஆப் பரோடா 1,928.25, அலகாபாத் வங்கி 1,520.37 கோடியும், ஆந்திரா வங்கி 1,303.30 கோடியும், யூகோ வங்கி 1,224.64 கோடியும், ஐ.டி.பி.ஐ. வங்கி 1,116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 1,095.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 1,084.50 கோடியும், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா 1,029.23 கோடியும், கார்ப்பரேஷன் வங்கி 970.89 கோடியும், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா 880.53 கோடியும், ஓரியென்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் 650.28 கோடியும், சிண்டிகேட் வங்கி 455.05 கோடியும், கனரா வங்கி 190.77 கோடியும், பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி 90.01 கோடியும், தேனா வங்கி 89.25 கோடியும், விஜயா வங்கி 28.58 கோடியும், இந்தியன் வங்கி 24.23 கோடி நட்டத்தையும் அடைந்துள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விஜய் மல்லையா, நீரவ் மோடி, கனிஷ்க், போன்ற பெரும் மோசடி அதிபர்கள்தான், அதுத்தவிர வாராக்கடன், இலட்சத்தில் ஏற்பட்ட பல நஷ்டங்கள் போன்றவை இதெல்லாம்தான் இந்த நஷ்டத்திற்கு காரணம். இவைகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.