ADVERTISEMENT

'பாண்டி பஜார் ப்ளாட்பார்மில் எஸ்.ஏ.சி.' - ஆரம்பக்கால வாழ்க்கை குறித்து உருக்கம்  

01:17 PM Mar 05, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், யார் இந்த எஸ்.ஏ.சி. என்ற ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். அந்த சேனல் மூலம் தன்னுடைய சினிமா பயணங்களையும், வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

இது தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னரே வெளியிட்ட எஸ்.ஏ.சி., தற்போது முதல் காணொளியை வெளியிட்டுள்ளார். திநகர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு ப்ளாட்பார்மில் இருந்து காணொளி வெளியிட்டுள்ள எஸ்.ஏ.சி., அந்தக் காணொளிக்கு 'ப்ளாட்பார்மில் எஸ்.ஏ.சி.' எனத் தலைப்பிட்டுள்ளார். அந்தக் காணொளியில், தன்னுடைய சினிமா வாழ்க்கை சென்னையில் எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கிருந்தே தன்னுடைய சுயசரிதையை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இந்தக் காணொளியை ப்ளாட்பார்மில் இருந்து வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காணொளியில் தன்னுடைய ஆரம்பக்கால சினிமா வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை உருக்கமாகப் பேசியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT