தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் விஜய். இவர்,அரசியல் கட்சித் தொடங்கப்போவதாகசெய்திகள் வெளிவந்தன. 'அகில இந்தியத் தளபதி விஜய்மக்கள் இயக்கம்' என்ற பெயரில்அரசியல் கட்சியாகப் பதிவு செய்யக் கோரியவிண்ணப்பமும் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் வெளியானசிறிதுநேரத்திலேயே,விஜய்யின்செய்தித்தொடர்பாளர், விஜய்கட்சித் தொடங்கும்செய்தியைமறுத்தார். இந்தநிலையில் விஜய்யின்தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யின்பெயரில் அரசியல் கட்சித் தொடங்குவதுதன்னுடையமுயற்சி எனவும், இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யின்பெயரில் கட்சிஆரம்பிப்பது தன்னுடையமுயற்சி எனக் கூறியசிறிது நேரத்திலேயே,விஜய்அறிக்கை ஒன்றைவெளியிட்டார்.அந்த அறிக்கையில், தனதுதந்தை கட்சி ஆரம்பித்ததை ஊடகங்களின் வாயிலாக அறிந்ததாகவும்,தனக்கும், தன் தந்தை ஆரம்பித்த இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும்இல்லை எனவும்கூறியிருந்தார்விஜய். மேலும், "எனதுரசிகர்கள், எனதுதந்தைகட்சிஆரம்பித்துள்ளார் என்பதற்காக,தங்களைஅக்கட்சியில் தங்களைஇணைத்துக்கொள்ளவோ, கட்சிபணியாற்றவோ வேண்டாம்" என்றும்"எனதுபெயரையோ, புகைப்படத்தையோ,எனதுஅகில இந்தியத் தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோதொடர்புபடுத்திஏதேனும்விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்"என்றும் அவர்அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தனதுபெயரில், தனதுதந்தை கட்சி ஆரம்பித்ததை ஊடகங்களின் வாயிலாக தெரிந்துகொண்டதாக விஜய்கூறியது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் சமூகவலைதளங்களில்,விஜய்க்கும்,அவரதுதந்தை சந்திரசேகருக்கும் இடையே சுமுகஉறவு இல்லை எனச் செய்திகள் வலம் வரத்தொடங்கின.
இந்தநிலையில், தற்போதுஊடகங்களுக்குப்பேட்டியளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், தனக்கும்விஜய்க்கும் சுமுகமானஉறவு இருப்பதாகவும், மற்றவர்களின் கற்பனைக்கெல்லாம் விளக்கம் சொல்லமுடியாதுஎனவும் கூறியுள்ளார். மேலும், அவர் "விஜய்யின்பெயரிலானஇயக்கம், 1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக தொடங்கப்பட்டு, நற்பணிமன்றமாகமாறி, இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அந்த மக்கள் இயக்கத்தில் உள்ள தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், அங்கீகாரத்தையும் தரவே, இயக்கத்தைக்கட்சியாகப் பதிவு செய்தேன்" என்றும்கூறியுள்ளார்.