நடிகர் ஜெய் தற்போது விஜய் தந்தை இயக்கத்தில் நடிக்கிறார். இது ஜெய்க்கு 25-வது படமாகும். டூரிங் டாக்கிஸ் படத்துக்குப் பின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் தற்போதைய தலைமுறையினரின் காதலைப் பற்றி கதையமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நடிகை வைபவி, நடிகை அதுல்யா இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், 40 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 10 - 15 நாட்கள் மட்டுமே படபிடிப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போதுல்ல பெண்கள் எல்லாம் காதலை தைரியமாக வெளிப்படையாக சொல்கின்றனர். மேலும் ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை தெரிவிக்கின்றனர் என்றும் சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இது பல்வேறு தரப்பினரிடையும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றது.