இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாண்டவர் அணி எதற்காக தேர்தலில் போட்டியிட்டது. சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் பதவியை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இந்த வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
இதற்கு நடிகை வரலக்ஷ்மி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகை ராதிகாவும் விஷாலுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து கேள்வியும் எழுப்பியுள்ளார். “சரத்குமார் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபித்து இருக்கிறீர்களா? ஆயிரம் அழுக்கு மூட்டைகளை முதுகில் வைத்துக் கொண்டு சரத்குமார் பற்றி பேசலாமா? பிரிவினை பேசுவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.