vsV

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக வெளியாகி கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த நடிகை ராதிகா சூர்யா ஜோதிகாவை வெகுவாகப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

Advertisment

''பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக் காட்சியை அமேசானில் பார்த்தேன். நன்கு விவரிக்கப்பட்டுள்ள படத்தில் மூழ்கிப்போனேன். மிகவும் வலுவான கதை, சமூக ரீதியாகப் பொருத்தமான கதையம்சம் உள்ள படம். சூர்யா, ஜோதிகா இருவரும் நன்றாகச் செய்துள்ளீர்கள். உங்கள் நல்ல முயற்சிகள் உங்களுக்குள் நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜோதிகா தன்னைத்தானே நன்றாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்'' எனப் பதிவிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.