இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கை லண்டனில் விஷால், பிரசன்னா ஆகியோரை வைத்து மிஷ்கின் தொடங்கினார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாகும் துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் தயாரிப்பு செலவு முன்பு கணக்கு போடப்பட்டதைவிட அதிகமாகிவிட்டதால் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் விஷாலின் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது என்பதால் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கிவிட்டு, விஷாலே துப்பறிவாளன் 2வை இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்த செய்திகள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது மிஷ்கின் கிண்டலாக ஏதோ ஒரு பேட்டியில் பேசியதை வைத்து இவ்வாறு வதந்தி பரப்பட்டு வருகிறது என்றும் ஒருசிலர் சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள்.