ADVERTISEMENT

நாவலைத் தொடர்ந்து சிறுகதையைப் படமாக்கும் வெற்றிமாறன்!

06:42 PM Dec 01, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'வடசென்னை', 'அசுரன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன், நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து 'வாடி வாசல்' படத்தையும் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. கரோனா தொற்று பாதிப்பால், படப்பிடிப்புகள் தள்ளிப்போன நிலையில், வெற்றிமாறன் அடுத்து எந்தப் படத்தை இயக்குவார் என ரசிகர்களிடையே குழப்பம் எழுந்தது.

இந்தநிலையில், வெளிநாட்டில் தற்போது படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால், வெற்றிமாறன், சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றிவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சூரியை வைத்து, வெற்றிமாறன் இயக்கும் படம், ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை, டிசம்பர் மாதம் 8 -ஆம் தேதி, சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடங்கி, 40 நாட்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிமாறன் ஏற்கனவே, 'லாக்அப்' நாவலை அடிப்படையாக வைத்து 'விசாரணை' படத்தையும், 'வெக்கை' நாவலை அடிப்படையாக வைத்து 'அசுரன்' படத்தையும் இயக்கியுள்ளார். அதன்படி, இதுவரை நாவல்களைப் படமாக்கிய வெற்றிமாறன், முதல் முறையாகச் சிறுகதையைப் படமாக்குகிறார். இதன் பிறகு, சூர்யாவை வைத்து இயக்கவுள்ள 'வாடிவாசல்' படம், அதே பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT