ADVERTISEMENT

'சர்கார்' பட வழக்கை வாபஸ் வாங்க கை மாறிய பணம் எவ்வுளவு தெரியுமா...?

12:40 PM Oct 30, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

'சர்கார்' பட கதை பிரச்னையில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் தகவல்கள் வெளியான நிலையில் சர்க்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் திரைப்படத்தின் துவக்கத்தில் கதை 'நன்றி' என குறிப்பிட்டு வருண் ராஜேந்திரன் பெயரை வெளியிடவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சமரசத்திற்கு ரூ.30 லட்சம் வருண் கேட்ட நிலையில் அதை தருவதாகவும் முருகதாஸ் ஒத்துக்கொண்டுள்ளார். கதையை திருடவில்லை என்று ஏ ஆர் முருகதாஸ் கூறி வந்த நிலையில் திடீரென சமரசத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதைத்தொடர்ந்து உதவி இயக்குனர் வருன் ராஜேந்திரன் தொடர்ந்த சர்கார் பட வழக்கை வாபஸ் பெற்றார். மேலும் வழக்கு விசாரணையை மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம். இந்நிலையில் வழக்கு வாபஸ் ஆனதால் ஏற்கனவே அறிவித்த தேதிப்படி தீபாவளியன்று 'சர்கார்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT