Skip to main content

'நான் அவங்க மாதிரி இல்ல...' விஜய் குறித்த சீக்ரெட்டை உடைத்த பழ.கருப்பையா!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
pazha karupaiya

 

முன்னாள் எம்.எல்.ஏவும் 'சர்கார்' படத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியபோது...

'சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் ஒரு உறுதி இருக்கிறதை நான் பார்த்தேன். தான் அளப்பரிய அன்பு செலுத்தும் இந்த உலகத்துக்கும், இளைஞர்களுக்கும் அவர் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். மேலும் எல்லா நடிகர்களும் களைத்துப்போன காலத்தில் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நான் விறுவிறுப்பாக இருக்கும் காலத்திலேயே அரசியலுக்கு வரவேண்டுமா என்று சிந்தித்து கொண்டிருக்கின்றேன் என்றும் சொன்னார். ஆனால் அவர் இப்போது அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"எடப்பாடி பழனிசாமி பணத்தின் மூலமே அரசியலில் நிலைத்து நிற்கிறார்" -  பழ.கருப்பையா 

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Pazha Karuppaiah Interview

 

அதிமுக விவகாரங்கள் குறித்தும் தற்போதைய தமிழக அரசியல் குறித்தும் பல்வேறு கருத்துக்களை மூத்த அரசியல்வாதியும், தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் அவரிடம் தான் கூட்டம் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்திகளைத் தான் இரண்டு கட்சிகளுமே பயன்படுத்துகின்றன. அதற்கு பணம் தேவைப்படுகிறது. அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்களை நம்ப வைக்கின்றனர். எடப்பாடிக்கு அடிக்கவும் தெரியும், கொடுக்கவும் தெரியும். 

 

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்தனர். போராட்டத்துக்கு வந்த மக்களின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று போலீசுக்குத் தோன்றியதற்குக் காரணம், ஸ்டெர்லைட் அவர்களுக்கும் பணம் கொடுத்து வந்தது. அந்த நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது கேவலமான விஷயம். இவர்கள் யாரையுமே நான் தலைவராகக் கருதவில்லை. எடப்பாடி பழனிசாமி பணத்தின் மூலமே அரசியலில் நிலைத்து நிற்கிறார். 

 

பாஜகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யமாட்டார். இவருடைய பலவீனம் எல்லாம் பாஜகவுக்கு தெரியும். சிறுபான்மை மக்கள் தற்போது முழுமையாக திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள். பாஜகவோடு கூட்டணி வைத்து அந்த வாக்குகளை திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி இலவசமாக வழங்கி வருகிறார். டெல்லியில் அதிகாரத்தில் இருப்பதால் அதிமுகவை பாஜக கட்டாயப்படுத்துகிறது. ஓபிஎஸ் ஆரம்பம் முதலே தவறான அரசியலை நடத்தி வந்தார். தர்மயுத்தம் முதலே அவருடைய அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் குழப்பமாகவே இருக்கின்றன. 

 

தர்மயுத்தம் எதற்காகத் தொடங்கினாரோ அதற்கு எதிராக சசிகலாவை ஆதரிக்கத் தொடங்கினார் ஓபிஎஸ். சசிகலாவுக்கு ஆரம்பத்தில் அதிக ஆதரவு இருந்தது. அப்போதே அவர் தனியாக ஒரு கட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். அதிமுகவில் தான் சேர வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு அவருக்கு எதிராக மாறிவிட்டது. எடப்பாடி பழனிசாமி பாஜகவை தொலைத்துவிட்டுத் தனியாக வந்தால் அணிகள் மாறிவிடும். திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும். காலைச் சுற்றிய பாம்பாக இருக்கும் பாஜகவை உதறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை. அது அவருக்கு பாராளுமன்றத் தேர்தலில் எதிர்மறையான விளைவையே தரும்.

 

 

Next Story

“புகழ் என்பது தானாக வர வேண்டுமே தவிர சின்னங்களை ஏற்படுத்துவதன் மூலம் வராது” - பழ.கருப்பையா பேச்சு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

 'Fame should come by itself and not by creating symbols'- Fruit. Karupaiya speech

 

தமிழ்நாடு தன்னுரிமை கழகம் எனும் புதிய கட்சியை துவங்கியுள்ள பழ.கருப்பையா நிகழ்ச்சி மேடையில் பேசுகையில்,

 

கடலுக்குள் பேனா நட்டு  அவருடைய தகப்பனாரின் பெயரையும், புகழையும் நிலைநாட்டி அதன் வழியாகத் தான் தொடர்ந்து ஆள வேண்டும் என விரும்புகிறார் ஸ்டாலின். இது மீனுக்கு இடைஞ்சல், மீனவர்களுக்கு இடைஞ்சல், கடலுக்கு இடைஞ்சல், சுற்றுப்புறத்திற்கு இடைஞ்சல். நான் சொல்லுகிறேன், நீங்கள் கேட்க மாட்டீர்கள். மக்கள் கொடுத்த வரி பணம் இருக்கிறது என்று கலைஞருக்காக 78 கோடி செலவழிப்பீர்கள். இது உங்களுடைய சொந்தப் பணம் இல்லை. சொந்த பணத்தை வைத்து செய்தால் நாங்கள் கேட்க மாட்டோம். ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன். வீராணம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. வீரநாராயண சோழன் என்கின்ற ஒரு மன்னன் தன்னுடைய பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக கடல் போன்ற ஏரியைக் கட்டி அந்த ஏரிக்கு தன் பெயரைச் சூட்டிக் கொண்டான். அவன் பெயர் இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக அந்த தண்ணீர் தமிழ் மக்களுக்கு பயன்படுகிறது.

 

கல்லணையை கட்டினான் கரிகாலன். அவன் என்ன கடலுக்குள் போய் சின்னங்களை ஊன்றிக் கொண்டானா? அவனவன் செய்த செயலின் காரணமாக புகழ் வரும். கரிகாலனின் புகழ் அவன் கட்டிய கல்லணையின் வழியாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கின்ற மக்கள் எல்லாம் கரிகாலனின் பெயரை சேர்த்து தான் சொல்கிறார்கள். பென்னிகுயிக் என்ற வெள்ளைக்காரன் முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்த பணத்தில் கட்டினான். அவனுடைய பெயரையும், புகழையும் அந்த பகுதி மக்கள் தங்களுடைய திருமண பத்திரிகையில் எழுதுகிறார்கள். நம்முடைய வாழ்வு அவனால் வந்த வாழ்வு என்று நன்றி கொண்டாடுகிறார்கள். புகழ் என்பது தானாக வர வேண்டுமே தவிர, நாம் சின்னங்களை ஏற்படுத்துவதன் மூலம் எல்லாம் வர முடியாது'' என்றார்.