ADVERTISEMENT

"வா புத்தாண்டே வாழ்த்துகிறோம் உன்னை.." வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை!

11:00 AM Dec 31, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தாண்டில் கரோனா, ஊரடங்கு, வேலையின்மை என பல பிரச்சனைகளை சந்தித்தாலும், இவை அனைத்தையும் மறந்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று பலரும் தங்களின் கடந்த வருடத்தை நினைவு கூர்ந்தும், வரவிருக்கும் புதிய ஆண்டிற்கு வாழ்த்து கூறியும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அறிவு வழிநடத்த ...

துணிவு துணையிருக்க

உழைப்பு செயல்படுத்த

நேர்மை நிலைநிறுத்த

என்ன செய்துறும்

இன்னல் எம்மை?


வா புத்தாண்டே

வாழ்த்துகிறோம் உன்னை

மலர்கொண்டு வா

கணிதந்து போ

மன்பதை வாழ்க

மானுடம் வெல்க" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT