பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது வாழ்க்கை வரலாறை தழுவி ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் எழுதிய நாவல் தற்போது புளோன்ட் (Blonde) என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் மர்லின் மன்றோ கதாபாத்திரத்தில் அனா டி அர்மாஸ் நடித்துள்ளார். ஆண்ட்ரூ டொமினிக் இயக்கியுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் வைரமுத்து இப்படத்தை பார்த்து அனைவரும் பார்க்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாமானியன் முதல் ஜனாதிபதி வரை உடல் சுரண்டலுக்கு உட்பட்ட நடிகை தூக்க மாத்திரை தின்று துக்கத்தில் மரிக்கிறாள். மர்லின் மன்றோவின் சாவில்கூட ஒரு செளந்தர்யம். பாவம் புகழின் கீழே ரத்தம். 'BLONDE' - வலிக்கிறது படம். எல்லாரும் சாகும்முன் ஒருமுறை..." என குறிப்பிட்டுள்ளார்.