ADVERTISEMENT

இரண்டாவது முறையாக பார்ட்-2வில் நடிக்கும் விஷால்... ரசிகர்கள் மகிழ்ச்சி...

06:04 PM May 10, 2019 | santhoshkumar

சண்டக்கோழி-2 படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வருகிற மே10ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘அயோக்யா’, இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் இந்த படம் கடந்த மாதம்ஏப்ரல் 19ஆம் தேதி வெளிவர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஷால் நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியால் படம் தள்ளிபோனது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் மே 10ஆம் தேதி வெளி வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. மே 7ஆம் தேதி இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டு, U/A சான்றிதழ் இப்படத்திற்கு பெற்றது. இதன் பின்னும் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லபப்ட்டது.

நேற்று (மே 9) வரை தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த அயோக்யா இன்று (மே 10) காலை வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து மிகுந்த வருத்தத்துடன் விஷால் ஒரு பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் விஷால் இப்படம் முடிந்தவுடன் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற பேச்சு வந்தது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT