ADVERTISEMENT

பெண்ணின் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கிய தயாரிப்பாளர் தாணு

10:14 AM Oct 28, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் தாணு தயாரிப்பில் வெளியான 'நானே வருவேன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா - வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். இதனிடையே தயாரிப்பாளர் தாணு சினிமாவைத் தாண்டி பலருக்கு உதவி செய்தும் வருகிறார்.

அந்த வகையில் தயாரிப்பாளர் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஒற்றைத் தாயான அந்தப் பெண் கடந்த 2 வருடங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தாணு அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதற்கான காசோலையைச் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோரிடம் தயாரிப்பாளர் தாணு வழங்கியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT