ADVERTISEMENT

'அரண்மனை 4'-ம் பாகத்துக்காக தயாராகும் இயக்குநர் சுந்தர் சி! 

04:42 PM Jul 26, 2021 | santhosh

ADVERTISEMENT

சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், படம் மாபெரும் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் சுந்தர். சி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விவேக், யோகி பாபு, சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல. ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. அண்மையில் 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் 'அரண்மனை 3' படத்தின் தணிக்கை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் நேரடியாக திரையரங்குக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரண்மனை 4-ம் பாகத்தையும் எடுக்க சுந்தர்.சி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்துவிட்டதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்பை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT