/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/78_28.jpg)
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இதில்கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘அரண்மனை 3’ திரைப்படம் அடுத்த மாதம் ஆயுத பூஜை தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிசெய்யும் விதமாக தயாரிப்பாளர் குஷ்பு ட்வீட் செய்துள்ளார். ‘அரண்மனை 3’ படத்திற்கு யு/ஏதணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, அடுத்த மாத வெளியீட்டிற்கு தயாராக உள்ளதாக அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் எனும்போது பண்டிகை தினமான ஆயுத பூஜை தினத்தன்றே ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில், விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)