ADVERTISEMENT

தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் இயக்கத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

03:52 PM Jan 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு கடந்த ஆண்டே வெளியானது.

இந்நிலையில் துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளனர். இப்படத்தை முதலில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அன்பறிவு சகோதரர்கள் இருவரும் இயக்கவுள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அன்பறிவு சகோதரர்கள் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'மெட்ராஸ்', 'கபாலி', 'கைதி', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றிய இவர்களுக்கு 'கே.ஜி.எஃப்' படத்திற்காக சிறந்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT