இந்நிலையில் இந்த விளம்பரம் போலியானது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த விளம்பரத்துக்கும், எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த திரைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். விளம்பரம் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறோம். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம், இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரம் தந்து புனிதமான கல்வியை விளம்பரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு என்றுமே நல்லதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
pic.twitter.com/c9alYJ4qkE