அதில் ஒரு படம்தான் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ. இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியான சமயத்தில்தான் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஐந்து மொழிகளில் ஹீரோ என்றொரு படம் உருவாகுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
மேலும் விஜய்தேவரகொண்டாவை வைத்து ஹீரோவை எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் டைட்டில் உரிமையை நாங்கள்தான் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று முன்னமே தெரிவித்திருந்தது. ஆனாலும், இதை கண்டுகொள்ளாமல் சிவா படத்தின் போஸ்டர் வரை ஹீரோ என்றே டைட்டில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை வைத்து ஹீரோ படத்தை தயாரிக்கும் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இதை சட்டப்படி அணுகுவதற்காக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இரண்டு நிறுவனங்களும் இப்போது யார் படத்தின் டைட்டில் ஹீரோ என்ற பிரச்சனையில் இறங்கியுள்ளது.