இந்நிலையில் நடிகர் சிம்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “சிம்பு பெண்களைத் திட்டுகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அந்தப் பெண்கள்தான் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். நான் என் அப்பாவுடன் சண்டைபோடாமல் அம்மாவுடன் சண்டை போடுவேன். ஏனென்றால் எனக்கு என் அம்மாவைதான் ரொம்ப பிடிக்கும். அதேதான் பிடித்தவர்கள் மீதுதானே கோபத்தை காட்ட முடியும். நான் உங்களிடம் கோபித்துக்கொள்ள கூடாதா? அதே சமயத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் முதலில் குரல் கொடுப்பதும் நான்தான். அவர்களுக்குப் பிரச்சினை தருபவர்களை சும்மா விடமாட்டேன்.
அப்படியே நம்ப பசங்களை பற்றி கொஞ்சம் பேசுவோம், பெண்கள் சிம்பு ஃபேன் என்றால் தைரியமாக கண்ண முடிக்கொண்டு காதலியுங்கள். ஊரே ஒருவனை கழுவி ஊத்தும்போதும், இவன் காலி என்று சொல்லியபோதும் அவனை விட்டு போகாமல் துணையாக நின்றவர்கள். நாளைக்கு எப்படி கட்டிய பெண்ணையும், காதலித்த பெண்ணையும் விட்டுட்டு போவார்கள்” என்று கூறினார்.